வலி அடர்ந்த நெஞ்சிலே
விழி தெளிந்த நீரிலே
மனம் வருடும் உன் நினைவில்
தினம் வாழும் நிலையிலே
அந்த காலம் வேண்டுமடி
ஆசை அது தேவையடி
காதலின்றி காமமின்றி
நட்பில் நாமும் இருந்தோமடி
விதிபிரித்தால் விலகிவிட்டாய்
வேண்டுமென்றே மதி மறந்தாய்
சதி ஒழிக்கும் திறன் கொண்டும்
சாட்சிகளையே நம்பிவிட்டாய்
என்னை மட்டும் தனியே விட்டாய்
உன்னை எதனில் தேற்றி கொண்டாய்
அதையாவது கூறி விட்டால்
அப்புறம் நீ பேச வேண்டாம்.