திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நீயே சொல்

வலி அடர்ந்த நெஞ்சிலே 
விழி தெளிந்த நீரிலே 
மனம் வருடும் உன் நினைவில் 
தினம் வாழும் நிலையிலே 

அந்த காலம் வேண்டுமடி 
ஆசை அது தேவையடி 
காதலின்றி காமமின்றி 
நட்பில் நாமும் இருந்தோமடி

விதிபிரித்தால் விலகிவிட்டாய்
வேண்டுமென்றே மதி மறந்தாய் 
சதி ஒழிக்கும் திறன் கொண்டும் 
சாட்சிகளையே நம்பிவிட்டாய்

என்னை மட்டும் தனியே விட்டாய் 
உன்னை எதனில் தேற்றி கொண்டாய்
அதையாவது கூறி விட்டால் 
அப்புறம் நீ பேச வேண்டாம்.



செவ்வாய், 3 மே, 2011

உலக பத்திரிகை சுதந்திர தினம்


பெற்றதற்க்கா? பெற போவதற்கா ?
பேசியும் பேசாமலும் கொண்டாடலாம்
இன்றைய நாளில் எதிர்வரும் நாளை

கைபேசி அடிமை


கணிணியிலும் இணைய இணைப்பு இல்லை
கைபேசியிலும் இதே தொல்லை
இறந்து விட்ட பின் என் கனவில்
இந்த அதிசயம் நடந்து தொலைக்கிறது

நட்பின் நடப்பு



பகலென்றால் ஞாயிறாகவும்
இரவென்றால் நட்சத்திரமாகவும்
நிலவினை விட்டது கூட நான்
நிலையில்லாமல் தேய்ந்து மறைவதால்
நான் கொண்ட அவள் நட்பும்
அவள் கொண்ட என் நட்பும்
நாளெல்லாம் நட்பிற்காய் இணைந்து
நடக்க போகிறதாம் பாருங்கள்


என்கனவு தோழி


இசையோடு அவளும்
என்கவியோடு நானும்
பாடலாகி பக்தியாகும்போது
பகலில் கூட தூங்கிவிடுகிறேன்
தாயைபோன்றே சிலநேரம்
தாலட்டிவிடுவதால் எனக்கு

நட்புக்கு இது சொந்தம்


பிசிராந்தையின் நட்பைபோலே 
பேஸ்புக்கிலோ* ஜி டாக்கிலோ* 
கோப்பெருஞ்சோழனுக்கு குறுங்கவிதை 
கூறிகொண்டிருப்பதை பாருங்கள் 
நம் நட்போ ஒரு பால் 
நடக்கும் நட்போ எதிர்பால் 
வரலாறு நாளை மாற்றித்தான் எழுதிகொள்ளும்போல 
வளர்ந்து கொண்டிருக்கும் இவர்கள் நட்பை பார்த்து 
வடக்கிருந்து உயிர்துறந்தது நம் நட்புபென்றும் 
வாழ்க்கைமுழுதும் உயிருடன் இருக்கும் இவர்கள் நட்புபென்றும் 


* பிறமொழிச்சொல் 

நட்பின் புரிதல்

பக்கத்தில் சென்றால் கடித்துவிடும் 
பயமில்லாமல் நட்புகொள்கிறது
பறவையும் விலங்குமாய் நட்பிற்கு 
பார்க்காமல் கிடைத்த நட்புகூட மனிதவடிவில் 
பழையவை பழித்து பழகிகொண்டிருக்கிறது இப்போது.