தலைமட்டிலோ ஜேம்ஸ் ஆலன்
தலையணையாக காப்மேயர்
நெஞ்சிலிருக்க தமிழ் இலக்கியம்
நேரம் கடத்த சூ. ' .பி ஞானம்
சென்னின் தத்துவம் புத்தியில் புரள
கலீல் ஜிப்ரானின் தீர்க்க தரிசி
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
கால்மாட்டிலும் கணக்கற்ற புத்தகம்
கவிதைமட்டுமே கண்களுக்க் தூக்கமாய்
இத்தனையும் என்னை தாலாட்ட முடியாமல்
எந்தன் கிராமத்திற்கும் செல்லமுடியாமல்
விழித்திருக்க வேதனையாய் கணிணித்திரையும்
வேலையிருக்க நான் ஒரு சடலமாய்
படித்தது அத்தனையும் மறந்து விடுகிறேன்
படிக்க வேண்டிய வெற்றியையும் துறந்துவிடுகிறேன்
அட்டாங்க யோகம் பழகலாமேன்றால்
அடிக்கடி மாறும் பணி வேளையால்
பக்தி யோகமும் பழகமுடியவில்லை
பாருங்கள் கர்மயோகத்தில் கண்தூங்கவில்லை
இராஜயோகமும் தொடகூடவிலை
இனி ஞானயோகமும் விதைக்காத முல்லை
நகரம் எனக்கு நரகத்தை கொடுக்க
நாட்டுபுறமும் எதிரியாய் இருக்க
சித்தனை போன்று வாழுந்துபார்க்கலாம்
பித்தனை போன்று துணிகூட உதறி
ஆறறிவு என்னை அஞ்ஞானம் யாக்கி
அதிகாலை ஆக்சிஜன் பிராணயாமம் தாக்கி
விடிகிறபோது தூக்கத்தின் கானலால்
விஞ்ஞான மாற்றத்தில் ஏங்கி போகிறேன்
நிலையான தூக்கத்தில் கனவின்றி செரிப்பதால்
நித்தம் நித்தம் கனவில்தான் தூங்கி நான் போகிறேன்
நெற்றி பொட்டில் ஞானம் நில்லைக்கும்வரையில்
நிலையில்லா வாழ்வினில் நான் ஒரு மாயையே