திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நீயே சொல்

வலி அடர்ந்த நெஞ்சிலே 
விழி தெளிந்த நீரிலே 
மனம் வருடும் உன் நினைவில் 
தினம் வாழும் நிலையிலே 

அந்த காலம் வேண்டுமடி 
ஆசை அது தேவையடி 
காதலின்றி காமமின்றி 
நட்பில் நாமும் இருந்தோமடி

விதிபிரித்தால் விலகிவிட்டாய்
வேண்டுமென்றே மதி மறந்தாய் 
சதி ஒழிக்கும் திறன் கொண்டும் 
சாட்சிகளையே நம்பிவிட்டாய்

என்னை மட்டும் தனியே விட்டாய் 
உன்னை எதனில் தேற்றி கொண்டாய்
அதையாவது கூறி விட்டால் 
அப்புறம் நீ பேச வேண்டாம்.



செவ்வாய், 3 மே, 2011

உலக பத்திரிகை சுதந்திர தினம்


பெற்றதற்க்கா? பெற போவதற்கா ?
பேசியும் பேசாமலும் கொண்டாடலாம்
இன்றைய நாளில் எதிர்வரும் நாளை

கைபேசி அடிமை


கணிணியிலும் இணைய இணைப்பு இல்லை
கைபேசியிலும் இதே தொல்லை
இறந்து விட்ட பின் என் கனவில்
இந்த அதிசயம் நடந்து தொலைக்கிறது

நட்பின் நடப்பு



பகலென்றால் ஞாயிறாகவும்
இரவென்றால் நட்சத்திரமாகவும்
நிலவினை விட்டது கூட நான்
நிலையில்லாமல் தேய்ந்து மறைவதால்
நான் கொண்ட அவள் நட்பும்
அவள் கொண்ட என் நட்பும்
நாளெல்லாம் நட்பிற்காய் இணைந்து
நடக்க போகிறதாம் பாருங்கள்


என்கனவு தோழி


இசையோடு அவளும்
என்கவியோடு நானும்
பாடலாகி பக்தியாகும்போது
பகலில் கூட தூங்கிவிடுகிறேன்
தாயைபோன்றே சிலநேரம்
தாலட்டிவிடுவதால் எனக்கு

நட்புக்கு இது சொந்தம்


பிசிராந்தையின் நட்பைபோலே 
பேஸ்புக்கிலோ* ஜி டாக்கிலோ* 
கோப்பெருஞ்சோழனுக்கு குறுங்கவிதை 
கூறிகொண்டிருப்பதை பாருங்கள் 
நம் நட்போ ஒரு பால் 
நடக்கும் நட்போ எதிர்பால் 
வரலாறு நாளை மாற்றித்தான் எழுதிகொள்ளும்போல 
வளர்ந்து கொண்டிருக்கும் இவர்கள் நட்பை பார்த்து 
வடக்கிருந்து உயிர்துறந்தது நம் நட்புபென்றும் 
வாழ்க்கைமுழுதும் உயிருடன் இருக்கும் இவர்கள் நட்புபென்றும் 


* பிறமொழிச்சொல் 

நட்பின் புரிதல்

பக்கத்தில் சென்றால் கடித்துவிடும் 
பயமில்லாமல் நட்புகொள்கிறது
பறவையும் விலங்குமாய் நட்பிற்கு 
பார்க்காமல் கிடைத்த நட்புகூட மனிதவடிவில் 
பழையவை பழித்து பழகிகொண்டிருக்கிறது இப்போது. 


திங்கள், 2 மே, 2011

கவிதை வருவது எப்படி ?

 அறுபது வயது ஆயுட்காலத்தில் 
இருபது வயது தூங்கியே 
எத்தனையோ பேர் வாழ்ந்திருந்தாலும் 
எனக்கு அதுவோ பத்து வயது 
படாத பாடு படுகின்றேனே பாருங்கள்
 படுக்கை முழுக்க புத்தகங்கள் 
இங்கர்சாலின் சிந்தனைகள் இடப்பக்கம் 
எமர்சன் கருத்து வலப்பக்கம் 
தலைமட்டிலோ ஜேம்ஸ் ஆலன்
தலையணையாக காப்மேயர்
நெஞ்சிலிருக்க தமிழ் இலக்கியம்
நேரம் கடத்த சூ. ' .பி ஞானம்
சென்னின் தத்துவம் புத்தியில் புரள
கலீல் ஜிப்ரானின் தீர்க்க தரிசி
கண்ணதாசனின்  அர்த்தமுள்ள இந்துமதம்
கால்மாட்டிலும் கணக்கற்ற புத்தகம்
கவிதைமட்டுமே கண்களுக்க் தூக்கமாய்
இத்தனையும் என்னை தாலாட்ட முடியாமல்
எந்தன் கிராமத்திற்கும் செல்லமுடியாமல்
விழித்திருக்க வேதனையாய் கணிணித்திரையும்
வேலையிருக்க நான் ஒரு சடலமாய்
படித்தது அத்தனையும் மறந்து விடுகிறேன்
படிக்க வேண்டிய வெற்றியையும் துறந்துவிடுகிறேன்
அட்டாங்க யோகம் பழகலாமேன்றால்
அடிக்கடி மாறும் பணி வேளையால்
பக்தி யோகமும் பழகமுடியவில்லை 
பாருங்கள் கர்மயோகத்தில் கண்தூங்கவில்லை 
இராஜயோகமும் தொடகூடவிலை 
இனி ஞானயோகமும் விதைக்காத முல்லை 
நகரம் எனக்கு நரகத்தை கொடுக்க 
நாட்டுபுறமும் எதிரியாய் இருக்க 
சித்தனை போன்று வாழுந்துபார்க்கலாம் 
பித்தனை போன்று துணிகூட உதறி 
ஆறறிவு என்னை அஞ்ஞானம் யாக்கி 
அதிகாலை ஆக்சிஜன் பிராணயாமம்  தாக்கி 
விடிகிறபோது தூக்கத்தின் கானலால் 
விஞ்ஞான மாற்றத்தில் ஏங்கி போகிறேன்
நிலையான தூக்கத்தில் கனவின்றி செரிப்பதால் 
நித்தம் நித்தம் கனவில்தான் தூங்கி நான் போகிறேன் 
நெற்றி பொட்டில் ஞானம் நில்லைக்கும்வரையில் 
நிலையில்லா வாழ்வினில் நான் ஒரு மாயையே  








இக்கால மனிதர்கள்

இன்குபேட்டரில்* பொரித்ததை போன்றே 
இக்கால குழந்தைகள் கோழிகுஞ்சாய் 
சிசேரியனில்* பிறக்க வைக்கப்பட்டு 
செல்லமாய் புட்டிபால் புகட்டி 
பறவையினமாய் இருந்தாலும் கோழி 
பறக்காமல் வாழ்க்கை நடத்துவதுபோல் 
மனித இனமாய் இருந்தும் 
மதியின்றி கால்நடைக்கு ஒப்பாய் 


*பிறமொழிச்சொல் 

சனி, 19 பிப்ரவரி, 2011

என்னவளே இனிக்கிறதே


அவளுடைய தலைபூவை
அதில் போட்டு வைத்திருந்தேன்
அதை திருடி போகாவந்தாய்
அப்படியா இனிப்பிருக்கு ? 

காத்திருக்கேன் காதலியே


வங்கியில் வாழ்நாள் காதலி
வருகிற நாளெல்லாம் நடப்பு கணக்காய்

சிறுக சிறுக சேமிப்பாய் கனவுகள் கூட
சிரிப்பை மட்டுமே கடனாய் கேட்பேன்

திருப்பி செலுத்துவேன் முத்தமாய் காதலி
தினம் பார்க்கும் வாய்ப்(பு)பூக்கு செலுத்தினேன் காசோலை

வைப்பு தொகையாய் வட்டி விகிதமாய்
வளர்வதும் தேய்வதும் வருத்தத்தில் உதடுகள்

பூட்டிய நகையாய் போனது இதயம்
பொருத்தமான சாவியும் திருடியே போனாள்

இணைத்த படிவத்தில் குண்டூசி சொருகி
இருக்கிறேன் இருகண்களில் அடையாள வில்லையாக

கூப்பிடுவாளோ குரல் கொடுப்பாளோ கொடுமையில்லாமல் மின்சார ஒலி கெடுப்பாளா? 

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

போய்விட்ட காதலர் தினம்

பனிரெண்டு மணி நேரம் அவளுக்காக காத்திருந்தேன்
பனிரெண்டு மணி நேரம் அவனுக்காக காத்திருந்தேன்

ஒரு நாள் முழுவதும் உங்களுக்காக காத்திருந்தேன்
ஓ காதலனே
ஓ காதலியே நீங்கள் ஏன் இன்னும் வரவில்லை
ஒரு வருடம் கழித்து உங்களுக்காக வந்திடுவேன்

காதலர்களாய் காலம் கடந்து காத்திருக்கும் அந்நாளில்
கண்டிப்பாக நீங்கள் சேர்வீர்கள் என்று போய்விட்டேன், வந்திடுங்கள்

என்னவளோடு எனக்கும் ஏமாற்றம்
எத்தனை நாள் நீடிக்கும் இந்த மாற்றம்..........?
என் காதோடு இந்நாள் கேட்டு கொண்டிருக்கும் கேள்வி .....


திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினமும் கவிதையும்


நான் எழுதிய
எத்தனையோ கவிதை
எழுந்து வந்தது ஒன்றாய்
உயிராய்
இன்றைய தினமாக அவளுடன் 

காதலர்களாய் காதலர்தினத்தில்


ஏமாற்றம் தருவதற்கு
எத்தனையோ நாள் விடிந்திருக்க
இடம் மாற்றும் இதயத்திற்காக
இந்த நாள் வீற்றிருக்க

அவ(ன்)ள் உதடு ஆசனத்தில்
அமர்வதற்கு ஆசை ஆட்சி
அத்தனைக்கும் காதல் ஒன்றே
அருமையான இந்நாள் சாட்சி

பண்டைகாதல் அதன் பெருமை
பழகி பார்க்க புது அருமை
வந்த இன்று இரு இளமை
வாழ்க்கைக்காக ஓர் இனிமை

சேர்க்க ஒரு சிறப்பாச்சு
செயற்கையில்லா இயற்க்கையாச்சு
என்றும் அழியா காதல் இன்று
எங்களில் தோன்றும் வாழ்வாச்சு 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

இதுவரையின் என் காதல்

அன்றைய பொழுது
ஆங்காங்கே நிறுத்தத்தில்

பேருந்து இறக்கிவிட
பெண்ணொருத்தி காணப்பட்டாள்

கால் முதல் தலைவரை
கண் முதல் என் வரை

உள்ளத்தில் மெதுவாய்
உணர்ச்சிகளால் நடந்து

தலைகுனிந்து தலையேறி
தன்னந்தனியாய் விட்டுவிட்டாள்

முகத்தோடு முழுநிலவு
முத்தமாக ஈர நினைவு

வரும் வேளை பகல் கனவு
வருத்தத்தில் என்னுதடு

முணுமுணுக்கும் பெயரென்ன
முடிவடையா பயணத்தில்

தவறிவிட்ட தலையெழுத்து
தனக்கானவள் இவளா

தூரிகையாக எண்ணமாக
துணையாக அவளாக

மற்றொரு சித்திரமாய்
மானுடத்தின் விசித்திரமாய்

வேறெங்கோ தென்படுவாள்
விதியாக மாறுபடுவாள்

அழகாக மட்டுமல்ல
அறிவோடும் அகபடுவாள்

சமயலோடும் சாதனையும்
சரிசமமாய் என்னுடனே

கணினியோடு கண்ணடிப்பாள்
காதலனாய் கைபிடிப்பேன்

புதன், 9 பிப்ரவரி, 2011

காதலர் தினம் 14


திங்களுக்கு எத்தனை நாள்
தினம் மாறும் கிழமைகள்

சந்திக்க பச்சை உடையில்
சட்டென்று வாராதா

பகல் கனவில் அவள் நினைவு
பருவத்துடனே தூங்கி கொண்டு

உருவம் ஒன்று வரைந்து வைக்க
உயிர் வருமாம் பதினான்கில்

எழுந்து விட்ட என் வேலை
எழுதி கொண்டது விடுமுறைக்கு

சுகமானால் சுகமில்லை
சுரம் வராமலும் வரமாட்டேன்

கிழக்கு கடற்கரை காதலன்


அலையோரம் கடலோடு
மணலாக உன் நினைவு

வீடு கட்டும் குழந்தைபோல
வேடிக்கையாய் காதல் அன்று

சின்ன சின்ன ஆசைபோல
சேர்ந்து கட்டிய மணல் வீடாய்

அலைவரும் நேரம் வரை
அடித்து சொன்ன சத்தியமும்

கரைந்துதான் போகிறது
கடலும் கண்ணுமாய் கரிக்கவே

கை நீட்டி உப்பு கேட்கிறது
காதலன் நான் நின்றிருந்தேன்

அலையோடு பேசிக்கொண்டேன்
ஆவலாக கேட்டு கொண்டேன்

நான் கூட உன் போலே
நம்பிக்கையை இழக்காமல்

தினம் தேடி கரை வந்தேன்
திரும்பி வருவாள் என் காதலியும்

கிழக்கு கடற்கரையும் கிறுக்கிய சிறுவனும்


சின்ன குழந்தையாய் அன்று
சேர்த்து கட்டிய மணல் வீடாய்
அலையாடும் கடலோரம்
அன்று நான் அழுதிருந்தேன்

கடலோடு கரைந்ததனால்
கவலையில் மிதந்தது மண் சுவர்
சுவரில்லா சித்திரம்
சோதனையாய் என் திறம்
கற்பனையில் தீட்டியது
கண்ணீரில் கோடிட்டது

தப்பு செய்த கடல் உனக்கு
தண்டனையை தருவதற்கு
உப்புதான் சிந்திவிட்டேன்
உலகம் என்றும் கரித்திடுவாயே


இரகசியத்தை சொல்லாதே கைபேசி !


நீயிருக்கும் தைரியத்தில்- நான்
என் வீட்டில் யாரோடும் பேசுவதில்லை
உனக்கு மட்டுமே தெரியும்- நான்
யாரோடு பேசி கொள்வேனென்று ?

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இன்பமா துன்பமா கைபேசி ?



தூக்கத்திலிருந்து எழவும்
துக்கத்திலிருந்து அழவும்
கைபேசியிலிருந்து அவ(ன்) ள் அழைப்பும்
கனவு கலைந்து விட்ட என் பிழைப்பும்
காலையிலேயே மாலை அவ(ள் ) ன்
கழுத்தில் போட்ட வேளை? 

இமைக்காமல் காதலி


ஆறடியில் வில்லு ஒன்னு
அம்படிக்க இரண்டு கண்ணு
போரடிச்சு செத்து போனேன்
புதுமை என்ன பிழைத்திருந்தேன்

வில்லும் அம்பும் வேண்டாமென்று
சொல்லும் அன்புமாய் சுத்தி வந்தாள்
சொர்க்கம் இதுதான் முத்தம் தந்தாள்

இறந்த பின்னாலும் நீ எப்படியென்றால்
இருந்தால் அன்பு கூட வருமென்றாள்

வில்லும் அம்பும் விதியே நான்தான்
சொல்ல துணிந்ததும் கூடுமே காதல்தான்

அம்பாற துணிக்கும் ஆசையுண்டு
அதனாலே இமைகூட எதிரியென்று
கன நேரம் கூட கண் சிமிட்டாமல்
காலம் முழுக்க பார்த்திருப்பேன் என்றுதான்

வில்லாக என்னுடலை விலகாத காதலால்
வீரனாய் உன் பார்வை வெடுகென்று உடைத்ததால்

உன்னோடு சொர்க்கம் வந்தேன்
உனக்கும் எனக்கும் இப்போ இமைப்பதில்லை
ஊடல் காதலென்று என்றும் கனவுமில்லை

சனி, 5 பிப்ரவரி, 2011

*பலங்கைச் சவடு


அறுபது சதவீத தேய்மானம்
ஆண்டுக்கு ஒருமுறை வாங்கப்பட்டு விற்கப்பட்டு
அப்படியே இருக்கிறது
எப்போதோ வாங்கப்பட்ட கணினி
இந்த பலங்கைச் சவடில்
ஒவ்வொரு முறையும் புதியதாக வாங்கியது போல
கள்ள பணத்தின் கணக்கை சுமந்து

* பலங்கைச் சவடு - BALANCE SHEET

கணிபொறி கவிதை


இணைய தளம் என் மதம்
எழுதும் அத்தனையும் என்னினம்
தேடும் பலவும் பாதையாக
திறக்கும் அறிவே கடவுளாகும் 

காதலில் நான் தேர்வேனா ?


காதலிக்க பயமில்லாதவன்
காதலிக்கு பயமுல்லவன் 

கைபேசியே உன்னிடம் தான் ?


கணிபொறியும் கைபேசியும் கலந்தாச்சு
கட்டணம் கூட ஒன்றாச்சு
முகம் பார்க்கும் வசதியும் உண்டாச்சு ,
ஆனால் அவ(ன்) ள்
முத்தம் மட்டும் ஏன் எச்சிலோடு இல்லை 

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

உலக கோப்பை மட்டை பந்து பிப்ரவரி* 19

மட்டை பந்து பார்ப்பேன்
மண்டை உடைக்க ஆறு வரும்
மருந்து போடா நாலு வரும்
சண்டை விலக்க மூன்று வரும்
சாட்சி சொல்ல இரண்டு வரும்
ஒன்று மட்டும் கூட வரும்
முட்டாள் என்று மு(மொ)ட்டை இடும்

* பிறமொழிச்சொல்


குறிப்பு : இக்கவிதை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் என் தோழர்களுக்கு


புதன், 2 பிப்ரவரி, 2011

காதல் கடன்


காதல் அழியாதது
கடனும் அழியாதது
செலவுக்கு தரும் நண்பன்
சிநேகிதமாய் சொன்னது

விவசாயியின் காதலி


நன்செய்யிலே பாத்தி கட்ட
புன்செய்யிலே மண்ணெடுக்க
பெண்செய்யும் காதலிலே
ஆண்செய்யும் ஆசையென்ன ?

காதல் தலையா பூவா


மோரும் புளித்து போக
நீரும் இனித்து போக
கைபடத்தான் அவள் வேண்டும்
காசை சுண்டினால் பூவிழுமா ?

இதய சிறையில் எனது தற்கொலை


கைது செய்தாள் கண்களால்
கட்டி இழுத்து போனால் உள்ளத்தால்
சிலகாலம் சிறையில் அடைத்தால் இதயத்தில்
செத்து போனேனே தூக்கினில்

வாலிப பரிசு


ஓடினால் காதல் பரிசு
தேடினால் கல்யாண பரிசு

கைபேசியின் அழைப்பொலியிலே


கோவில் மணியாய் உன்னுள்ளே
கும்பிடும் பக்தியாய் தாயுள்ளே
நல்ல சகுனமாய் தெரிந்ததாம்  பெண்பார்க்க
நான் மட்டும் அறிவேன் அவள் அழைப்பை

திங்கள், 31 ஜனவரி, 2011

என் காதல் (கனி) பழ மொழி


காதற்ற ஊசியும் கடைக்கண் வாரா
காதல்தான் கடைக்கண் வரை வரும்

பிப்ரவரி* 14


பதினான்கு நாட்களுக்கு பின்
பச்சை உடையோடு வருவேன்
ரோஜாக்களுக்கு* செடிகள்  எழுதியது
அவளோ ரோஜா* வாய் பூத்தால்
அடி செடியாக நான் இருப்பேன்

*பிறமொழிச்சொல்

என் மீது காதல் என் நிழல் மீது மோகமா ?


காதலியாகவே இருந்து போகிறேன்
கண்ணகியாய் மட்டும் விட்டு போகதே

நிழலோடு பேசாதே கள்வனே
நீ என்னோடு மட்டுமே பேசு

சாபமும் நெருப்பும் சந்திப்பது
திருட்டில்

பிரிவதும் புரிவதும் தொலைக்கட்டும்
இருட்டில்

அவளிடம் முதல் முத்தம்


வருடம் பிறக்கும்போது
வாய்ப்பிருந்தால் கேட்டிருப்பேன்
முப்பத்தியோரு நாளும்
முத்தமாய் கடந்திருக்கும்

சனி, 22 ஜனவரி, 2011

அவனின் கண்கள் !


தொடர்ந்து வருகிறாய் துருவி பார்க்கிறாய்
முடிந்து போகிறது
இமைகளின் இடைவெளியில்

கண்ணோடு கண் நான்கில் கணக்கிட்டேன்
கழிந்தது நாணத்தினால்
எனது மட்டும்

கனவை கூட்டும் கண்களோடு உனக்கு
மீதம் மட்டுமே
இன்றைய பார்வை

என்றாவது ஒருநாள்
திரும்பி பார்ப்பேன்
உன்னையும்
என் கண்களையும்

ஏனெனில் என்னைத்தவிர இவ்வுலகில்
மெல்லிய இதயத்தால்
இமை மூடபடுவதில்லை 

உன் இதயத்தில் இருந்தாலும் எனது தவிப்பு !


வேறு ஒருவனோடு திருமணதிற்கு
சம்மதித்து விட்டேன்
என்று இறந்து போன என்னால்
எப்படி கூறமுடியும் ?

அவனின் விழிப்பு !


உன் நினைவுகளை பூசிகொள்கிறேன்
என் அழகு கூடிகொள்கிறது
உன் பருக்களின் கேள்விக்கு
என் பார்வையின் பதில்

காதலியின் கவிதை


உன்னை கவிஞன் ஆக்கினேன் என்றா
உன் கவிதையால் என்னை காதலி ஆக்கினாய்
என் கவிதையில் எந்த புலமை இல்லை என்றாலும்
என் பெயரே உன் கவிதை ஆகும்போது
உன் உயிரே என் கவிதை ஆகாதா ? 

அன்பே வலிக்கிறது இதழோடு இதழ் !


எனக்கு பூ கொடுக்க
எத்தனை முற்கள்
அவனின் விரல் நிழல்
சுட்டிக்காட்டிய சுவடுகள் ! 

கண்ணும் பார்வையும் காதலால் !


எத்தனையோ கண்கள் என் மீது
என் பார்வையோ உன் மீது 

கா. காதலி !


எனக்கு சொல்ல தெரியவில்லை
உன் கவிதையில் என் பெயரென்றால்
உன் கவிதையில் என் தலைப்பு
உன் பெயரின் முதலெழுத்து

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கைபேசி உன்னை வைச்சிக்கவா?

நல்லது கொஞ்சமாய்
கெட்டது பல மிஞ்சுமாய்
கைபேசி உன்னை கொஞ்சித்தான்
காலத்தால் கிடக்கிறாயே தஞ்சமாய்

உன் காதல் தோல்வியால் என் மரண வாக்குமூலம் !

உன் பொழுது வாழ்க்கைக்காய் விடியும்போது
என் பொழுது காதலுக்காய் முடிந்து கொள்ளும் 

அலங்கா நல்லூர் மாடு அடக்குதல்

அலங்கா நல்லூர் மாடு அடக்க
அலட்டல் இல்லாமல் வந்திடுவீர்

காப்பீடு தேவையில்லை
காளைகள் கொன்றாலும்

கொம்பு சீவி கூராக்கி
கூட்டத்தையும் சீராக்கி

அம்பை போன்று புறப்பட்டு
அடக்கட்டும் ஆண்கள் மட்டும்

தெம்பை மூட்டும் மின்சாரம்
திடீரென நின்றதால்

கன்னத்தில் கைவைத்து
காப்புரிமை அவலத்தை

என்னத்தான் சொல்லுவது
எண்ணத்தை சொல்லுகின்றேன்

குழந்தைகளை குட்டிசுவராக்கும்
கொடூரமான விளையாட்டாம்

கணினியில் விளையாடும்
காளை அடக்கும் விளையாட்டாம்

உண்மையான வீரம்தான்
உயர் நீதிமன்றம் குறுக்கிட

தன்மான தமிழுக்காய்
தலை மகனாய் மென்பொருளில்

வடிவமைத்தால் பொறுக்க வில்லையாம்
வழக்கில் இருக்குது என் கணினி விளையாட்டு

காளை ஒன்று இனி வளர்த்திடுவேன்
கண்ணை மூடும் நீதியினை

குத்தி கிழிக்கும் கொம்போடு
கொடுத்திடுமாம் நீதியினை 

வேண்டுகோள் என்பது !

எனக்கு மரணமில்லை 
நெகிழி பைகள் நெஞ்சை 
நிமிர்த்தி எழுதியது இது 

நான் இறந்து கொண்டிருப்பதால் 
எனக்கும் உன் போல் வாழ ஆசை 

மண்ணோடு வளியும் 
மற்றதும் வலியால் 
வாழ்க்கை கேட்ட அவலம் 

ஆக்சிஜன் அடைக்க பட்டு 
அதன் வாய் கட்டப்பட்டு 
ஓட்டு கேட்கும் உயிர் பிச்சை 
ஓட்டையாக்கும் நெகிழி பையில் 

காற்றும் வரும் காசும் வரும் 
கையை நீட்டும் மக்கள் கூட்டம் 

கண்கள் திறந்தால் நன்றாய் இருக்கும் 
கவலை படும் எந்தன் பூமி 

கவிதை மட்டும் படித்தால் போதாது 
கண்டுக்காமல் விட்டாலும் சொல்வதை சொல்வேன் 

கடைக்கு போகும் கவிதை வாசியே 
கையில் துணி பை எடுத்து செல்லேன் 

காய்கறி பச்சையாய் வாங்கி வரலாம் 
கடனே இல்லாமல் ஓசோனை அடைக்கலாம் 

*நெகிழி பைகள்-polythene cover 


திருமணத்திற்கு முன்னும் பின்னும்

காதலிப்பவன் அல்ல
காதலிக்க படுபவன்
எனக்காக இல்லை
என் குடும்பத்திற்காக 

பெட்ரோல்* டீசல்* மற்றும் எரிபொருள்

கண்ணீர் பூமி சிந்துவதால்
கவலை இல்லாமல் வாழலாம்

வண்டியோட்டும் வர்க்கங்களே
வாரி குடிக்கிறீர் வளி செந்நீர்

சிந்தும் கண்கள்
செத்து கொண்டிருக்க

சீரழியும் எண்ணெய் கசிவு
சிரித்து கொண்டிருக்க

பூமித்தாயின் புலம்பலாய்
புழுவாய் செரிக்கும்
மண்ணின் மாந்தர்களே

மரபு எரிபொருள்
மாற்றம் காணுங்கள்

மரணிக்கும் மண்ணுக்கு
மரங்களை நடுங்கள்

தண்ணீர் ஊற்றுங்கள்
தாகம் அடங்குங்கள்

மழை நீர் பெறும்போது
மறக்க வேண்டாம்

சூரிய சக்தியை
சுவிஸ் வங்கியே சேருங்கள்

கள்ள பணம் கைவிடும்
கலி காலம் போய்விடும்

மெல்லத்தான் மாறினால்
மீண்டும் பூமியாய்

பிறந்திடுவேன் உம்மை
பிறக்க வைப்பேன்

கவிதையில் கல்லறை கட்டி
கவலையால் செத்து விழுந்த

இளையவன் இவன் சிந்தும்
எரிபொருளே பெட்ரோல் *
இன்னும் பல இது போல்

குறைவாய்தான் இருக்குது
குடிக்காதீர் சுத்தமாய்

செரிக்காமல் இருக்கிறேன்
செந்தமிழின் சடலமாய்

*பிறமொழிச்சொல் 

சனி, 8 ஜனவரி, 2011

மாட்டு பொங்கல்

எனக்கு பால் கொடுத்த பசு
என்னை ஞாபகம் வைத்து
இப்போது கோமியமாவது கொடுக்கும்
மாட்டு பொங்கல் கொண்டாட
மறக்காமல் சென்றிடுவேன் ஊருக்கு

கால் கட்டை அவிழ்த்து
காளை ஊசியும் தவிர்த்து
குட்டைக்கு இழுத்து, இன்று
குளிப்பாட்டி வைப்பனே

அங்காடி அரிசி பொங்கி உனக்கு
அம்மாவுக்கு நிகராய் படைத்தாலும்
எட்டி உதைக்காமல் என்னை
இதுவரை மறக்கவில்லை நீ

நக்கி பார்த்திடுவாயே
நகரத்து வாழ்வில் நான்
சிக்கி சிதைந்தாலும் உன்
சீம்பால் மறக்க முடியுமா ? 

எங்கேயோ இருந்து படித்து கொண்டிரு காதலி !

காத்திருக்க காத்திருக்க சொல்லிவிட்டு
கற்பனையில் கூடயிருந்து கொல்லுகின்றாய்

போய்விடுவேன் போய்விடுவேன் சொல்லிவிட்டு
புறமூச்சை உள்ளிழுத்து தள்ளுகின்றாய்

இதயமில்லை இம்சையில்லை சொல்லிவிட்டு
இரத்தத்திலே யுத்தம் ஒன்று செய்கின்றாய்

சிரிப்புமில்லை அழுகையுமில்லை சொல்லிவிட்டு
சிந்தனையில் உண்மை மட்டும் அள்ளுகின்றாய்

கொஞ்சமில்லை கூடவில்லை சொல்லிவிட்டு
கொஞ்சி கொஞ்சி முத்தம் மெல்ல எண்ணுகின்றாய்

பஞ்சணையில் தூக்கமில்லை சொல்லிவிட்டு
பார்த்ததை கூட பகல் கனவாய் விழிக்கிறாய்

அஞ்சலில்லை செய்தியில்லை சொல்லிவிட்டு
அடிகடி அடிகடி கைபேசியை திட்டுகின்றாய்

இத்தனையும் என்னை மட்டும் எழுத விட்டு
ஏனடி கவிதையாக இதை படிக்கிறாய் 

ஒரு கிராமத்தில் நாளை ?

சுற்றுலா கிராமம் சொன்னால் கேளுங்கள்
சுவை மிகுந்த வருமானம் நாளை நீங்கள் நம்புகள்
கழனி விற்று கல்வி கற்ற காலம் மாறி போச்சு
காந்தி சொன்ன கிராமம்தானே கையைகூப்பும் விளம்பரத்தில் பேச்சு

சென்னையில் இருந்து சில மைல்கல்
சீர்காழிக்கு பக்கத்தில்
கோவையில் இருந்துவர குளிர்சாதன வண்டி
குளிதலையின் முந்தைய வெற்றிலை

சேரே இல்லா இயற்கை ஏரி
சிதம்பரத்தை ஒட்டினார் போல்
ஆறுக்கும் பேருக்கும் ஐம்பது அடி
அலைக்கும் கரைக்கும் தூரமில்லாமல்

நாட்டு பனையும் நார்த்தையும்
நரியின் தோளோடு நாயும்
உலவி திரியும் ஊர்
உல்லாச சுற்றுலாவுக்கு சேர்

கிளைடர்* நிறுத்த தனிக்கட்டணம்
கிணற்று நீரை பார்பதற்கும் செலுத்தனும்
குடும்பமாய் வந்தால் கட்டண கழிவு
குதூகலமாய் வாருங்கள் நண்பர்களே

வார விடுமுறை வரலாறில் மறைந்ததால்
மாத விடுமுறையில் மனம் மகிழலாம் வாருங்கள்
வருட விடுமுறை வருவதற்குள்ளே
வாய்ப்பு காத்திருக்கிறது வாருங்கள்

முப்பாட்டன் முந்திய கிராமத்தை காண
முட்டாளாய் மாறிய பட்டணம் தவிர்த்து
நெல்லு விளையும் நேர் காணலை
நேரமிருந்தால் ஐந்து நிமிடம் கண்டு செல்லுங்கள்

இரண்டாயிரத்து ஐநூறு கலோரி
இறாலின் வேதியியல் சுவை
கொழுப்பே இல்லாமல் கோழி மாத்திரை
குடிநீர் இல்லாமல் விழுங்க வசதியும் உண்டு

வெட்டி கதைகளை விஞ்ஞான அழிவினை
கொட்டி தீர்த்திடும் குற்றால அருவியும்
மென்பொருள் கண்காணிப்பில் வீசிடும் தென்றலும்
மீறினால் தண்டம் மட்டுமே இங்கு உண்டு

செத்து போய்விட்டால் சொர்க்கமென்று இங்கு
சொத்தை கொடுத்திடுங்கள் சொல்லுகின்றோம்
பழைய கிராமத்தை உருவாக்கி உங்கள் சமாதிக்கு
பணமும் அனுப்பி வைப்போம் மாதமாதம் 


*பிறமொழிச்சொல்

வெற்றிக்கு வித்திடு

இறக்கை உடைந்த விமானம்
என்னிடம் கேட்கிறது பறக்கலாமா? 

நான் வீரனாய்

இன்னும் இறக்கவில்லை
சாகடிக்க பட்டதால் 

இப்போது

காதலிக்காமல் வாழ முடியாது
தோல்வி பெறமால் இறக்க முடியாது 

ஒரு தலை காதல்

தங்கை யாரையும் காதலிக்க கூடாது - அவன்
தான் காதலித்தாலும் சொல்லமுடியாமல் 

நான் காதலித்ததால்

கனவில் மட்டுமே தூங்கி கொள்கிறேன் 

ஆழி பேரலை ( சுனாமி )

ஆறடி போதாதென்று
அலையடி கொடுத்தது போதும்
ஆறடியில் அடக்கம் செய்ய
அத்துணை உயிர்களையும்
திருப்பிகொடு ( வாழ) 

அம்மா அல்ல புள்ள !

"அம்மா" "அம்மாவென்று"
அத்துணை முறை கத்தினேன்
திருவிழாவில் தொலைந்ததால்
தைரியமில்லாமல் ஒலிபெருக்கியில்
யாரோ யாரையோ அழைப்பதாக நினைதாயாம்
எங்கே இருக்க "புள்ள"
இறுதியாய் கத்தும்போதுதானே
என்னையே உனக்கு அடையாளம் தெரிந்து
கட்டி கொண்டாய் அல்லவா ?
பட்டிணத்தில் படித்த அம்மா கவிதையை
உனக்காக "புள்ள" வென்று புரியும்படி
சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன் 

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
நாளும் நானும் 

எனது உயில்

இறந்த இந்த நாளை பார்க்காதீர் !
நான் பிறந்த அந்த நாளை பாருங்கள் !
எதையும் சாதிக்க வில்லையென்றாலும்
எதையாவது சாதிப்பேன் என்று வளர்ந்துவிடுவேன் ! 

பரம்பரை சொத்து

வெற்றியை மட்டுமே கடனாய் கொடு
காலம் முழுக்க அடைக்காமல் தோல்வியோடு
இருந்து விடுகிறேன் 

ம் ம் மழலைக்கு தெரிந்தது !

என் பையன் ,
இலங்கையை எழுத்து விளையாட்டில்
கலைத்து போட்டான்,
ஆச்சர்யம் !
ஈழமாய் கலையாமல் கிடந்தது !
என்னை வந்து அடித்து விளையாடுவதால் ! 

காற்றே எச்சரிக்கை ?

எந்த புயலிலும் என்னோடு
உள்மூச்சிலும் வெளி மூச்சிலும்
உயிரோடு இருக்க பிழைத்து கொள் 

நெருப்பும் நானும் ஒன்றுதான்

வாழ்ந்து திரிகிறேன்
மறைந்து எரிகிறாய்
எரிந்து போகிறேன்
என்னோடு சாம்பலாகிறாய் 

புகை பிடித்தேன்

நுரையீரலை எரித்துவிட எத்தனையோ முறை
முயற்சிக்கின்றேன்
வாயோடு சென்று
மூக்கோடு முடிந்து போகிறது
அதனால்தானோ என்னவோ
நுரையீரல் புற்றோடு எரிந்து போகிறது
இறப்பும் என் ஆசையும்

அரிசியிடம் பேசினால் உனக்கென்னடி கோபம் !

உமியை போன்ற உந்தன் நாணம்
உடைந்த நொய்யாய் சிரிக்கும் பற்கள்
தவிட்டின் நிறம் தங்க உன் மேனி
தண்ணீரில் கலைந்த அரிசி வெள்ளை உள்ளம்

உளுந்து போலடி நானும் கருப்பாய்- காதலில்
ஊறவைத்து பார் வெளுப்பேன்

அரைக்க மட்டும் செய்யாதடி என்
ஆவி வேக வைத்தால் தாங்காதடி

இட்லி இதயம் இல்லையடி
இதனை சட்னி போல ஆக்கலாமடி

காரம் காதலுக்கு ஆகாதடி நீ
கடுகு போல வெடிக்காதடி

எண்ணெய் மட்டும் என்னை தானடி
இதை தாலிக்கு வேண்டாம் தாளிக்காதடி

என்னை தலைக்காவது தடவிகொள்ளடி

இறுதியாய் ........ 

தானத்தில் பெரியது எது?

சற்று முன் உயிரோடு இருந்தேன்
சடலமாகி போனேன் விபத்தில் இப்போது

அவசர ஊர்தியில் எடுத்து செல்ல
ஆளாளுக்கு பேரம் பேசினர்

பேரம் எதுவும் படியாமலே
பெரிய தொல்லையாய் ஈ மொய்க்க

சாவை நொந்து எழுந்து விட்டேன்
சல்லி காசுக்கும் குறையாமல்

பேரம் பேசியவன் அலறி
பேயென்று இறந்துவிட்டான்

இறந்தவன் உடலின் இதயத்தை எடுத்து
இரு சாவுக்கும் தானமாய் தந்துவிட்டு சென்றேன்

சுடுகாட்டிற்கு அல்ல சொர்க்கத்திற்கு
சொல்வதை நீங்கள் நம்புங்கள்

சட்டமும் சாப்பிட வரலாம்

அரசாங்க அரிசி கிடங்கில் தின்று 
ஆதாய யூக காய்கறியில் மண்டியில் குட்டி போட்ட 
ஏராள எலிகள் எல்லாம் 
எங்கள் மாமிச உணவில் 


மப்பா இருக்கு பட்டம் விடலாம் !

கல்வி பட்டத்தை
கடைசியாய் பறக்கவிட்டேன்
செல்லும் வானூர்தியில்
சிக்கிக்கொள்ளும் வேளையில்
மாஞ்சாவில் மாட்டிகொண்டு
மரணத்தில் தொங்காமல்
பிழைக்கும் வேலை
பிடித்தேன் நூலோடு

விமானியாக ஏக்கம்