திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நீயே சொல்

வலி அடர்ந்த நெஞ்சிலே 
விழி தெளிந்த நீரிலே 
மனம் வருடும் உன் நினைவில் 
தினம் வாழும் நிலையிலே 

அந்த காலம் வேண்டுமடி 
ஆசை அது தேவையடி 
காதலின்றி காமமின்றி 
நட்பில் நாமும் இருந்தோமடி

விதிபிரித்தால் விலகிவிட்டாய்
வேண்டுமென்றே மதி மறந்தாய் 
சதி ஒழிக்கும் திறன் கொண்டும் 
சாட்சிகளையே நம்பிவிட்டாய்

என்னை மட்டும் தனியே விட்டாய் 
உன்னை எதனில் தேற்றி கொண்டாய்
அதையாவது கூறி விட்டால் 
அப்புறம் நீ பேச வேண்டாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக