வியாழன், 2 டிசம்பர், 2010

தாய் இந்நாட்டில் , தவிர்த்தேன் வெளி நாட்டில்

வெளிநாட்டுக்கு சென்று நான்
வீட்டிலிருந்து கொண்டுவந்த ,

நாரத்தன் காய் ஊறுகாயை
நாடுகடந்தும் தொட்டுக்கொண்டேன் .

சுவையாக இருந்தது
சொட்டும் எச்சில் சொன்னது !

அம்மாவின் கைபதம்
அற்புதம்தான் என்றேன்,

இணையவழி உரையாடலில்
என் அம்மாவோடு ,

அவள்
ஊறுகாயை ஊறவைத்து
உப்பில்லை என்றாள் நேற்று .

நான்
வேறு என்னதான்
வினவினேன் இன்று .

கண்ணீரில் ஊறவைத்தால்
அன்பு ஊறுகாய் கசக்காது என்று

அவள் செந்நீர் சேர்த்து
செய்தாளாம் ............................!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக