வீட்டிலிருந்து கொண்டுவந்த ,
நாரத்தன் காய் ஊறுகாயை
நாடுகடந்தும் தொட்டுக்கொண்டேன் .
சுவையாக இருந்தது
சொட்டும் எச்சில் சொன்னது !
அம்மாவின் கைபதம்
அற்புதம்தான் என்றேன்,
இணையவழி உரையாடலில்
என் அம்மாவோடு ,
அவள்
ஊறுகாயை ஊறவைத்து
உப்பில்லை என்றாள் நேற்று .
நான்
வேறு என்னதான்
வினவினேன் இன்று .
கண்ணீரில் ஊறவைத்தால்
அன்பு ஊறுகாய் கசக்காது என்று
அவள் செந்நீர் சேர்த்து
செய்தாளாம் ............................!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக