வியாழன், 16 டிசம்பர், 2010

பித்தன் என்னை மன்னியுங்கள் !

கச்சா எண்ணெய் விலையேற்றம்
காரணத்தை கூறுகின்றான் திரும்ப திருமப்
நிதி அமைச்சன் சாதூர்யமாய் என்னை
நினைத்து விட்டன முட்டாள் என்று
மூன்று ரூபாய் விலை ஏற்றி
மூழ்கும் என் எண்ணம் எரிபொருளில்
இருபத்தி மூன்று நாள் அலுவலில்
இழந்து விட்ட நூற்று நாற்பது கோடியும்
தொலைதொடர்பு ஊழல் என்று இனி
தொட முடியா உயரத்தில் உலகில்
அமைச்சனின் குப்பை கொடியில்
அழிந்து மக்குதாம் கருவூலவடிகள்
கொஞ்சமல்ல 1 .73 கோடி இலட்சம்
குறுக்கில் வந்ததால் உச்ச நீதி மன்றம்
தெரிந்து கொண்டாலும் நான் என்ன செய்ய
திமிராய் இருக்குது ஆட்சி அதிகாரம்
தினமும் கிளம்புது புது புது ஊழல்
தீரா நோயாய் ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும்
கவலைகள்  தீர்வதற்கு கற்பனைகள் செய்தால்
கள்ள பணம் சுவிஸ் வங்கியில் வாங்கி
காத்திருந்தாலும் வராது இனிமேல்
கண்ணீரோடு காலமெல்லாம் பாடுபட்டாலும்
ஏறிவிட்ட எரி பொருள் விலைக்கு
எதிர்கட்சிகள் கலகம் செய்தாலும்
மானம் கெட்ட அனைத்து கட்சிகளும்
மறு தேர்தலில் வெற்றி பெற
காசு கொடுத்துதான் ஓட்டை வாங்கும்
காத்திருக்கிறேன் அந்த பணத்திற்கு
சேர்த்து வைத்த கடனையெல்லாம் எரி பொருளுக்காய்
செலவழித்தேன் சீக்கிரம் வா தேர்தலே சிக்கனமாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக