செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இமைக்காமல் காதலி


ஆறடியில் வில்லு ஒன்னு
அம்படிக்க இரண்டு கண்ணு
போரடிச்சு செத்து போனேன்
புதுமை என்ன பிழைத்திருந்தேன்

வில்லும் அம்பும் வேண்டாமென்று
சொல்லும் அன்புமாய் சுத்தி வந்தாள்
சொர்க்கம் இதுதான் முத்தம் தந்தாள்

இறந்த பின்னாலும் நீ எப்படியென்றால்
இருந்தால் அன்பு கூட வருமென்றாள்

வில்லும் அம்பும் விதியே நான்தான்
சொல்ல துணிந்ததும் கூடுமே காதல்தான்

அம்பாற துணிக்கும் ஆசையுண்டு
அதனாலே இமைகூட எதிரியென்று
கன நேரம் கூட கண் சிமிட்டாமல்
காலம் முழுக்க பார்த்திருப்பேன் என்றுதான்

வில்லாக என்னுடலை விலகாத காதலால்
வீரனாய் உன் பார்வை வெடுகென்று உடைத்ததால்

உன்னோடு சொர்க்கம் வந்தேன்
உனக்கும் எனக்கும் இப்போ இமைப்பதில்லை
ஊடல் காதலென்று என்றும் கனவுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக