புதன், 9 பிப்ரவரி, 2011

கிழக்கு கடற்கரை காதலன்


அலையோரம் கடலோடு
மணலாக உன் நினைவு

வீடு கட்டும் குழந்தைபோல
வேடிக்கையாய் காதல் அன்று

சின்ன சின்ன ஆசைபோல
சேர்ந்து கட்டிய மணல் வீடாய்

அலைவரும் நேரம் வரை
அடித்து சொன்ன சத்தியமும்

கரைந்துதான் போகிறது
கடலும் கண்ணுமாய் கரிக்கவே

கை நீட்டி உப்பு கேட்கிறது
காதலன் நான் நின்றிருந்தேன்

அலையோடு பேசிக்கொண்டேன்
ஆவலாக கேட்டு கொண்டேன்

நான் கூட உன் போலே
நம்பிக்கையை இழக்காமல்

தினம் தேடி கரை வந்தேன்
திரும்பி வருவாள் என் காதலியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக