அலையோரம் கடலோடு
மணலாக உன் நினைவு
வீடு கட்டும் குழந்தைபோல
வேடிக்கையாய் காதல் அன்று
சின்ன சின்ன ஆசைபோல
சேர்ந்து கட்டிய மணல் வீடாய்
அலைவரும் நேரம் வரை
அடித்து சொன்ன சத்தியமும்
கரைந்துதான் போகிறது
கடலும் கண்ணுமாய் கரிக்கவே
கை நீட்டி உப்பு கேட்கிறது
காதலன் நான் நின்றிருந்தேன்
அலையோடு பேசிக்கொண்டேன்
ஆவலாக கேட்டு கொண்டேன்
நான் கூட உன் போலே
நம்பிக்கையை இழக்காமல்
தினம் தேடி கரை வந்தேன்
திரும்பி வருவாள் என் காதலியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக