சின்ன குழந்தையாய் அன்று
சேர்த்து கட்டிய மணல் வீடாய்
அலையாடும் கடலோரம்
அன்று நான் அழுதிருந்தேன்
கடலோடு கரைந்ததனால்
கவலையில் மிதந்தது மண் சுவர்
சுவரில்லா சித்திரம்
சோதனையாய் என் திறம்
கற்பனையில் தீட்டியது
கண்ணீரில் கோடிட்டது
தப்பு செய்த கடல் உனக்கு
தண்டனையை தருவதற்கு
உப்புதான் சிந்திவிட்டேன்
உலகம் என்றும் கரித்திடுவாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக