திங்கள், 29 நவம்பர், 2010

உடல் ஈகை வள்ளல்

பல்லவன் சிலை கண்கள் கூட  உன்னை
பார்க்க துடிக்குதடா !
நல்லவன் சிலை உன்னை காண அது
நடந்து வந்ததடா !
சாக்கடை தலைவன் அரசியல் சிலைக்கு உன்னை
சகிக்க முடியலைடா!
காகம் தலையில் கழிந்தால் கூட அதற்கு
கண்ணை மூட தெரியலைடா!
இமய மலையும் பாறை பெயர்த்து உன்னை
ஏற்றி சிலையில் வைக்குமாடா !
எட்டப்பன் சிலைகள் இருந்தா உனக்கு
ஏளனம் செய்யுமாடா !
காவல் சிலைகள் கையை மூடி நிர்வாண
குற்றம் மறைகும்டா !
சட்ட சிலைகள் கையை கொடுத்து உன்
சாவின் நீதி அழிக்குமடா !
முத்துக்குமார் சிலைகள் என்றால் தமிழ் சங்கம்
முழங்கி எட்டு திக்கும் ஒலிக்குமடா !
சிங்களங்கள் சிலையாய் மாறி சித்தம் கலங்குதடா உன்
சிறப்பை நொந்து தீயை மூட்டி அது ,
சீக்கிரம் செத்து அழியுமடா !
ஈழம் சீக்கிரம் எழுமடா, உடல் ஈகை வள்ளலடா உன்
சிலை போரை முடிக்குமடா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக