திங்கள், 29 நவம்பர், 2010

பள்ளி காதலியும் ,கள்ள காதலியும்

பத்தாம் வகுப்பு காதல் நாங்கள்
பழகி கட்டிகொண்டோம்
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவில்
தினமும் திட்டி கொண்டோம்

இருபத்தி இரண்டாம் அகவையில்தானே
ஏமாற்றம் தெரிந்து கொண்டேன்
இரண்டாம் முறையும் காதலிக்கும்
இன்ப கள்ள காதல் தெரிந்து கொண்டேன்

கள்ள காதலி மடியில் தானே
 கவிதை எழுதுகின்றேன்
காவல் துறையின் சாட்சியில்தானே
முதல் காதலி கைவிடுகின்றேன்

நித்தம் சாகும் நீதி துறையும்
நேற்று பிழை (த்து ) நீதி செய்தால்
கள்ள காதலன் தலைவனாக
கருணை மனு தாக்கல் செய்வேன்

வழக்குகளில் வெற்றி பெற வாய்புண்டா
வாழ்க்கை கசந்து கேட்கின்றாள்
வாலிபத்தை என்னிடம் தொலைத்துவிட்ட
பள்ளி காதலி நீதியை தூற்றுகின்றாள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக