அரிசியிடம் பேசினால் உனக்கென்னடி கோபம் !
உமியை போன்ற உந்தன் நாணம்
உடைந்த நொய்யாய் சிரிக்கும் பற்கள்
தவிட்டின் நிறம் தங்க உன் மேனி
தண்ணீரில் கலைந்த அரிசி வெள்ளை உள்ளம்
உளுந்து போலடி நானும் கருப்பாய்- காதலில்
ஊறவைத்து பார் வெளுப்பேன்
அரைக்க மட்டும் செய்யாதடி என்
ஆவி வேக வைத்தால் தாங்காதடி
இட்லி இதயம் இல்லையடி
இதனை சட்னி போல ஆக்கலாமடி
காரம் காதலுக்கு ஆகாதடி நீ
கடுகு போல வெடிக்காதடி
எண்ணெய் மட்டும் என்னை தானடி
இதை தாலிக்கு வேண்டாம் தாளிக்காதடி
என்னை தலைக்காவது தடவிகொள்ளடி
இறுதியாய் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக