நெகிழி பைகள் நெஞ்சை
நிமிர்த்தி எழுதியது இது
நான் இறந்து கொண்டிருப்பதால்
எனக்கும் உன் போல் வாழ ஆசை
மண்ணோடு வளியும்
மற்றதும் வலியால்
வாழ்க்கை கேட்ட அவலம்
ஆக்சிஜன் அடைக்க பட்டு
அதன் வாய் கட்டப்பட்டு
ஓட்டு கேட்கும் உயிர் பிச்சை
ஓட்டையாக்கும் நெகிழி பையில்
காற்றும் வரும் காசும் வரும்
கையை நீட்டும் மக்கள் கூட்டம்
கண்கள் திறந்தால் நன்றாய் இருக்கும்
கவலை படும் எந்தன் பூமி
கவிதை மட்டும் படித்தால் போதாது
கண்டுக்காமல் விட்டாலும் சொல்வதை சொல்வேன்
கடைக்கு போகும் கவிதை வாசியே
கையில் துணி பை எடுத்து செல்லேன்
காய்கறி பச்சையாய் வாங்கி வரலாம்
கடனே இல்லாமல் ஓசோனை அடைக்கலாம்
*நெகிழி பைகள்-polythene cover
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக