சனி, 8 ஜனவரி, 2011

எங்கேயோ இருந்து படித்து கொண்டிரு காதலி !

காத்திருக்க காத்திருக்க சொல்லிவிட்டு
கற்பனையில் கூடயிருந்து கொல்லுகின்றாய்

போய்விடுவேன் போய்விடுவேன் சொல்லிவிட்டு
புறமூச்சை உள்ளிழுத்து தள்ளுகின்றாய்

இதயமில்லை இம்சையில்லை சொல்லிவிட்டு
இரத்தத்திலே யுத்தம் ஒன்று செய்கின்றாய்

சிரிப்புமில்லை அழுகையுமில்லை சொல்லிவிட்டு
சிந்தனையில் உண்மை மட்டும் அள்ளுகின்றாய்

கொஞ்சமில்லை கூடவில்லை சொல்லிவிட்டு
கொஞ்சி கொஞ்சி முத்தம் மெல்ல எண்ணுகின்றாய்

பஞ்சணையில் தூக்கமில்லை சொல்லிவிட்டு
பார்த்ததை கூட பகல் கனவாய் விழிக்கிறாய்

அஞ்சலில்லை செய்தியில்லை சொல்லிவிட்டு
அடிகடி அடிகடி கைபேசியை திட்டுகின்றாய்

இத்தனையும் என்னை மட்டும் எழுத விட்டு
ஏனடி கவிதையாக இதை படிக்கிறாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக