சனி, 8 ஜனவரி, 2011

தானத்தில் பெரியது எது?

சற்று முன் உயிரோடு இருந்தேன்
சடலமாகி போனேன் விபத்தில் இப்போது

அவசர ஊர்தியில் எடுத்து செல்ல
ஆளாளுக்கு பேரம் பேசினர்

பேரம் எதுவும் படியாமலே
பெரிய தொல்லையாய் ஈ மொய்க்க

சாவை நொந்து எழுந்து விட்டேன்
சல்லி காசுக்கும் குறையாமல்

பேரம் பேசியவன் அலறி
பேயென்று இறந்துவிட்டான்

இறந்தவன் உடலின் இதயத்தை எடுத்து
இரு சாவுக்கும் தானமாய் தந்துவிட்டு சென்றேன்

சுடுகாட்டிற்கு அல்ல சொர்க்கத்திற்கு
சொல்வதை நீங்கள் நம்புங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக