சனி, 22 ஜனவரி, 2011

அவனின் கண்கள் !


தொடர்ந்து வருகிறாய் துருவி பார்க்கிறாய்
முடிந்து போகிறது
இமைகளின் இடைவெளியில்

கண்ணோடு கண் நான்கில் கணக்கிட்டேன்
கழிந்தது நாணத்தினால்
எனது மட்டும்

கனவை கூட்டும் கண்களோடு உனக்கு
மீதம் மட்டுமே
இன்றைய பார்வை

என்றாவது ஒருநாள்
திரும்பி பார்ப்பேன்
உன்னையும்
என் கண்களையும்

ஏனெனில் என்னைத்தவிர இவ்வுலகில்
மெல்லிய இதயத்தால்
இமை மூடபடுவதில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக