சனி, 8 ஜனவரி, 2011

அம்மா அல்ல புள்ள !

"அம்மா" "அம்மாவென்று"
அத்துணை முறை கத்தினேன்
திருவிழாவில் தொலைந்ததால்
தைரியமில்லாமல் ஒலிபெருக்கியில்
யாரோ யாரையோ அழைப்பதாக நினைதாயாம்
எங்கே இருக்க "புள்ள"
இறுதியாய் கத்தும்போதுதானே
என்னையே உனக்கு அடையாளம் தெரிந்து
கட்டி கொண்டாய் அல்லவா ?
பட்டிணத்தில் படித்த அம்மா கவிதையை
உனக்காக "புள்ள" வென்று புரியும்படி
சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக